கலப்பு நீதிமன்றம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்படும் - மனித உரிமைகள் ஆணையாளர்

Wednesday, 22 March 2017 - 20:41

%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் வெளியிட்ட அறிக்கையை, பிரித்தானியா வரவேற்றுள்ளது.
 
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் 34ம் அமர்வில் உரையாற்றிய பிரித்தானிய பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார்.
 
2015 ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், அதன் மந்த நிலைகுறித்தும் இந்த அறிக்கையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
 
அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறும் பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்கு, கலப்பு நீதிமன்றம் குறித்த அழுத்தம் தொடரும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் கூறி இருக்கிறார்.
 
இந்த விடயங்களை வரவேற்பதாக பிரித்தானியா பிரதிநிதி அறிவித்துள்ளார்.
 
அத்துடன் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டிய பலகருமங்கள் எஞ்சி இருக்கின்றன என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips