இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருளை கடத்த முற்பட்ட பெண் ஒருவர் பெங்களுர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கொழும்பைச் சேர்ந்த குறித்தப் பெண், சென்னையில் இருந்து பெங்களுர் கெம்பெகௌடா விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த விமானம் ஒன்றில் ஏற முற்பட்ட வேளையில் கைதாகியுள்ளார்.
இலங்கையில் இருந்து வழங்கப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் போதைப் பொருளுடன் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடம் இருந்து 1.64 கிலோகிராம் போதைப் பொருள் மீட்கப்பட்டதாகவும், இதன்பெறுமதி 65 லட்சம் இந்தியா ரூபாய்கள் என்றும், பெங்களுர் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories