பிரித்தானியா நாடாளுமன்ற தாக்குதல் ; 7 பேர் விடுதலை..

Saturday, 25 March 2017 - 15:41

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%3B+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88..
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரில் 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் தொடர்ந்தும் 2 பேர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பிரித்தானிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் முன்னதாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு அருகில் சிற்றூர்ந்து ஒன்றிணை செலுத்தி வந்த ஒருவர், பொது மக்கள் மீது மோதி தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.

இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் 50 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் தற்போது பிரித்தானிய காவற்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips