அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னரின் ரஷ்ய தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதற்காக நியமிக்கப்பட்ட அமெரிக்காவின் விசேட விசாரணைக் குழு, அவரை இன்று விசாரணைக்கு உள்ளாக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் குழுவினர் ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ரஷ்யா, டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதன்அடிப்படையிலேயே தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஏற்கனவே டொனால்ட் ட்ரம்பினால் அமெரிக்காவின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட சிலர், ரஷ்யாவுடனான தொடர்பின் நிமித்தம் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories