ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இன்று கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சென்றிருந்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அளித்த முறைப்பாடொன்று தொடர்பில் வாக்குமூலமளிக்கவே அவர் அங்கு சென்றுள்ளார்.
இம்முறைப்பாடானது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்ட ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்ற புத்தகம் தொடர்பிலானதென தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரியொருவர் எமது ஹிரு செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories