அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகை தகவல்களை மேற்கொள் காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இதற்கமைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு அமெரிக்காவிற்கான உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ட்ரம்பின், அமெரிக்காவிற்கான விசா கொள்கை தொடர்பிலும் இந்திய பிரதமர் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories