ராஜ நாகத்தையே வாட்டிய வறட்சி:தண்ணீர் போத்தலில் நீர் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் - காணொளி

Thursday, 30 March 2017 - 12:56

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%3A%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
இந்தியா  கர்நாடக மாநிலத்தில் நிலவும் கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக ஊருக்குள் புகுந்த ராஜ நாகத்திற்கு தண்ணீர் போத்தலில் வனத்துறை அதிகாரிகள் தண்ணீர் கொடுத்த காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கைகா அணுமின்நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நேற்று ராஜ நாகம் ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவலளித்தனர்.

விரைந்து வந்து ராஜ நாகத்தை பிடித்த வனத்துறையினர், பாம்பு மிகவும் சோர்வாக இருந்ததால் அதை தண்ணீரில் நீந்த விட்டு புத்துணர்சி அளிக்க முடிவு செய்தனர்.

ஆனால், அப்பகுதியில் பருவமழை பொய்த்து கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் தண்ணீருக்கு திண்டாடிய வனத்துறையினர் கடைசியில் தண்ணீர் போத்தலை காசு கொடுத்து வாங்கி ராஜ நாகத்துக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர்.

இந்த காணொளி காட்சி தற்போது வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips