எஸ்.எப் .லொக்கா மீண்டும் விளக்கமறியலில்...

Thursday, 27 April 2017 - 17:15

%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D+.%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
அனுராதபுரம் இரவு விடுதி உரிமையாளரான கராத்தே வீரர் வசந்த சொய்சா கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இரோஷன் ரணசிங்க என்ற எஸ்.எப் .லொக்கா எதிர்வரும் மே மாதம் 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாகனமொன்றினை கடத்தியது தொடர்பில் கடந்த தினத்தில் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் , இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வசந்த சொய்சாவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர் சுமார் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் அனுராதபுர மேல் நீதிமன்றத்தால் இவர் கடும் பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips