அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் தொடரும்...வடகொரியா

Thursday, 27 April 2017 - 18:41

%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தப் போவதில்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது.
 
வடகொரியாவின் மனித உரிமைகள் பணிமனையின் பணிப்பாளரான சொக் கொல் வொன் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய அரிதான செவ்வியில் இதனைத தெரிவித்துள்ளது.
 
அமெரிக்கா தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தும் வரையில், அணு சோதனை தொடரும்.
 
வடகொரியாவின் அணு பலத்தை அதிகரித்துக் கொள்ளும் வேலைத்திட்டத்துக்கு, அணுவாயுத சோதனைகள் அவசியமாகும்.
 
எனினும் வடகொரியாவின் ஆறாவது அணுகுண்டு சோதனை எப்போது இடம்பெறும் என்ற தகவலை அவர் வழங்கவில்லை.
 
அதேநேரம் வெளிசக்திகளால் வடகொரியாவை கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips