கங்கைக்கு நீராட சென்ற பாடசாலை மாணவிக்கு கங்கையில் நடந்த கொடூரம்!காணொளி

Saturday, 29 April 2017 - 14:26

%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF++
கல்நேவ - முலன்னடுவ கங்கையில் நீராடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி ஒருவர் முதலைக்கு இரையாகியுள்ள நிலையில் அவரது சடலம் இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

இன்று பிரதேச மக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து குறித்த முதலையை பிடித்துள்ளதுடன், சிறுமியின் சடலம் முதலையின் வயிற்றுப் பகுதியில் இருந்துள்ளமை அறியவந்துள்ளது.

கல்நேவ- மத்திய கல்லூரியின் 07 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கே இந்த பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 27 ஆம் திகதி இரவு நேரம் தனது பெற்றோர் மற்றும் அண்டை வீட்டு சிறுவர்களுடன் கங்கையில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த மாணவி 13 வது வருட பிறந்த நாளை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி கொண்டாட இருந்த நிலையிலே இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








     



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips