பொலன்னறுவை - மனம்பிடிய பிரதேசத்தில் 8 வயதுடைய யானைக்குட்டியொன்று தனியார் பேரூந்தொன்றில் மோதுண்டு படுகாயமடைந்துள்ளது.
கடந்த 20ம் திகதி அதிகாலை பிரதான வீதியில் வீதியை கடக்க முற்பட்ட யானைக்குட்டி, தெஹிஹத்தகண்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தொன்றிலேயே இவ்வாறு மோதுண்டுள்ளது.
இதன் போது ,பேரூந்தில் பயணித்த பயணிகள் குறித்த யானைக்கு நீர் மற்றும் உணவுகளை வழங்கியுள்ளனர்.
பின்னர் பெகோ இயந்திரத்தின் உதவியுடன் யானைக்குட்டி பாரவூர்தியொன்றில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக கிரிதலே வனவிலங்கு காரியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி அதிகாலை பிரதான வீதியில் வீதியை கடக்க முற்பட்ட யானைக்குட்டி, தெஹிஹத்தகண்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தொன்றிலேயே இவ்வாறு மோதுண்டுள்ளது.
இதன் போது ,பேரூந்தில் பயணித்த பயணிகள் குறித்த யானைக்கு நீர் மற்றும் உணவுகளை வழங்கியுள்ளனர்.
பின்னர் பெகோ இயந்திரத்தின் உதவியுடன் யானைக்குட்டி பாரவூர்தியொன்றில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக கிரிதலே வனவிலங்கு காரியாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories