327 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

Monday, 22 May 2017 - 19:40

327+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
327 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் களனிமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்த இந்த கைது இடம்பெற்றுள்ளது.
 
சந்தேகத்துக்குரியவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 327 கிலோ கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
குறித்த போதைப்பொருளை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்து ஒன்றும் 3 கையடக்க தொலைபேசிகளும் காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
இதேவேளை, கிராண்பாஸ் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்டவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது மைக்ரோ ரக கைதுப்பாக்கி ஒன்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips