கடந்த சில நாட்களாக தொடர்ந்த மழையுடனான காலநிலை இன்று ஓரளவு குறைவடைந்தாலும், பருவப் பெயர்ச்சி காலநிலை காரணமாக நாளை தொடக்கம் மீண்டும் கடும் மழை பெய்யும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான மழை பொழியும் என குறிபிடப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகும் என அத் திணைக்களத்தின் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் அச்சத்தில்வுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Follow US
Most Viewed Stories