கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்கு உற்பட்ட இரணைத்தீவு மக்களால் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி அவர்கள் கடந்த 29 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரையில் தங்களுக்கான தீர்வு ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், அவர் இந்த கவனயீர்ப்பு பேரணியை நடத்தினார்கள்.
போராட்டத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்த அவர்கள் தங்களின் கோரிக்கை அடங்கி மனு ஒன்றையும் கையளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளதும், பொது அமைப்புகளதும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Follow US
Most Viewed Stories