இந்தியா - மும்பை - உல்லாஸ்நகரில் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவவர் கைது செய்யப்பட்டார்.
2 மாணவிகளையும் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள கொடூரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த 8 வயது மாணவன் அங்குள்ள தனியார் பாடசாலையில் படித்து வந்தான்.
கடந்த சில தினங்களாக அவன் பாடசாலைக்கு செல்லமாட்டேன் என அடம் பிடித்தான்.
பெற்றோர் அவனை வலுக்கட்டாயமாக பாடசாலையில் கொண்டு விட முயன்றபோது, தன்னிடம் ஆசிரியர் ஒருவர் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவலை கூறி அழுதான்.
இதைக்கேட்டு பதறிப்போன பெற்றோர் ஆசிரியர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் இதேபோல மேலும் 2 மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதும், 2 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்குகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸார் அவரை நீதிமனறத்தில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இந்த சம்பவம் உல்லாஸ்நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow US
Most Viewed Stories