ஆசிரிய நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான புதிய கொள்கை!

Thursday, 22 June 2017 - 20:14

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
ஆசிரிய நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான புதிய கொள்கையை  இந்த ஆண்டு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவை, சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியர்கள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள், வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும்.

மாணவர்களின் கல்வியை சிறந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக  இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளைக்கும் கல்விக்கான சலுகைகள் கிடைக்காமல் இருக்கக் கூடாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips