முச்சக்கர வண்டி விபத்தில் 3 பேர் பலி..

Sunday, 25 June 2017 - 7:09

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
ஹூங்கம - லுணம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.

முச்சக்கர வண்டி ஒன்றும் பாரஊர்தி ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் போது முச்சக்கர வண்டியில் 5 பேர் பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதிகாலை 3.30 மணியளவில் கொழும்பு - கதிர்காமம் வீதியில் தங்கல்ல நோக்கி பயணித்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றும், கதிர்காமம் நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் மோதுண்டதினால் இந்த கோர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு சிறுவர்கள் படுகாயமடைந்து ஹம்பாந்தொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த படங்கள் இணைப்பு..




       




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips