காட்டு யானை தாக்கி 2 பேர் பலி..

Sunday, 25 June 2017 - 9:13

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+2+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
காட்டு யானை தாக்கி சிறுமி உடப்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் காவன்னிஸ்புர - மங்கலவேவ வீதியில் சென்று கொண்டிருந்த சிறுமி, காட்டி யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

காவன்னிஸ்புர பிரதேசத்தினை சேர்ந்த 6 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று இரவு பொத்துவில் - முருசான சந்தி வீதியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது காட்டு யானை தாக்கியுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த குறித்த நபர் பொத்துவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips