முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாடு மற்றும் உந்துருளி தலைக்கவசம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!

Sunday, 25 June 2017 - 13:36

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
முச்சக்கரவண்டிகளின் வேக கட்டுப்பாடு தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

இதற்கமைய முச்சக்கரவண்டிகளின் வேக கட்டுப்பாடு மணித்தியாளத்திற்கு 40 கிலோமீற்றருக்கு மட்டுப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சாரதி அனுமதி பத்திரங்கள் பெறும் போது ஒருநாள் பயிற்சிகள் வழங்குவது தொடர்பிலும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, முச்சகரவண்டிகளுக்கான சாரதி அனுமதி பத்திரம் 35 வயதுக்கும் அதிகமானவர்களுக்கே வழங்கப்படவுள்ளதாகவும் சிசிர கோதாகொட சுட்டிக்காட்டினார்.

இதேவேளை,பாதுகாப்பு தலைகவசம் தொடர்பிலான தரம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் திருத்தப்பட்டு அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் அவர் தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சம்மேளனத்தின் 17வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
 
வீதி விபத்துக்களில் மூன்றுக்கு ஒரு மரணம் உந்துருளி விபத்தினால் ஏற்படுகின்றது.

இதனால் பலியாகுபவர்கள் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இந்த நிலையில் பாதுகாப்பான தலைகவசம் இருக்குமானால் அந்த உயிரிழப்பை தவிர்க்க முடியும்.

அந்த வகையில் பாதுகாப்பான தலைகவசம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு அடுத்த வாரம் அளவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips