தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பறிபோன உயிர்!

Sunday, 25 June 2017 - 17:35

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%21+
ஹம்பாந்தோட்டை , சமகிபுர , சிப்பிகுளம் பாசல் மாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என காவற்துறை தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்த நபர் தற்போதைய நிலையில் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் வீட்டுக்கு மற்றும் முச்சக்கரவண்டிக்கு சேதமேற்படுத்தியுள்ள நிலையில் , அவர் தற்போதைய நிலையில் குறித்த பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரை கைது செய்வதற்காக ஹம்பாந்தோட்டை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips