கொட்டாவை யுவதி படுகொலை : சந்தேகநபர் சரணடைந்தார்!

Sunday, 25 June 2017 - 19:50

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%3A+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
கடந்த 22ம் திகதி கொட்டாவை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று சட்டத்தரணி மூலம் கொட்டாவை காவற்துறையில் சரணடைந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் ஹக்மன , மீமென்ன , படபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

சரணடைந்த சந்தேகநபரை இன்று ஹோமாகம நீதிமன்றத்தில ்முன்னிலைப்படுத்திய நிலையில் , எதிர்வரும் மாதம் 4ம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 22ம் திகதி கொட்டைவை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் அறையில் இருந்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 29 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தேடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் குறித்த சந்தேகநபர் காவற்துறையில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips