தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 6 இந்திய கடற்தொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று மன்னார் பதில் நீதவான் இ. கயஸ் பெல்டானோவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
குறித்த இந்திய கடற்தொழிலாளர்கள் 6 பேரும் நேற்று இரவு அத்துமீறிய கடற்தொழிலில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories