கடவத்தை பிரதேசத்தில் காணப்படும் தனியார் ஆடை விற்பனை நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்ட 78 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஆடை விற்பனை நிலையத்துக்கு பணம் கொண்டுச் சென்ற வேனை, ராகமை பிரதேசத்தில் வழிமறித்த சிலர், பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், வேன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இன்று மதியம் வழிமறித்துள்ளதாக கடவத்தை காவற்றுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆடை விற்பனை நிலையத்தின், வத்தளை காட்சியறையில் இருந்து கடவத்தை காட்சியறைக்கு பணத்தை கொண்டுச் சென்றபோதே இந்தக் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை காவற்றுறை அதிகாரிகள் முன்னெடுத்துவருகின்றனர்.
ஆடை விற்பனை நிலையத்துக்கு பணம் கொண்டுச் சென்ற வேனை, ராகமை பிரதேசத்தில் வழிமறித்த சிலர், பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், வேன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு இன்று மதியம் வழிமறித்துள்ளதாக கடவத்தை காவற்றுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆடை விற்பனை நிலையத்தின், வத்தளை காட்சியறையில் இருந்து கடவத்தை காட்சியறைக்கு பணத்தை கொண்டுச் சென்றபோதே இந்தக் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை காவற்றுறை அதிகாரிகள் முன்னெடுத்துவருகின்றனர்.
Follow US
Most Viewed Stories