வீட்டுக்குள் நுழைத்து வர்த்தகர் கடத்தல்; 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரப்பட்டதாக மனைவி தெரிவிப்பு

Wednesday, 28 June 2017 - 10:57

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3B+50+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வென்னப்புவ பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வென்னப்புவ, ஹெலன் மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

25ஆம் திகதி அதிகாலையில், உந்துருளியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், தனது கணவனை கடத்திச் சென்றதாக, கடத்தப்பட்ட வர்த்தகரின் மனைவி, வென்னப்புவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

26ஆம் திகதி, மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தன்னை தடுத்து வைத்துள்ளதாகவும், தன்னை விடுவிக்க 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரப்பட்டுள்ளதாக, கடத்தப்பட் வர்த்தகர், அலைபேசியூடாக தன்னிடம் தொடர்பு கொண்டு கூறியதாக மனைவி, காவற்றுறையினரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடத்தப்பட்ட வர்த்தகர், தனியார் வெளிநாட்டு வியாபாரமொன்றில் ஈடுபட்டு வந்தாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips