தனது தாயில் கழுத்தில் துணி பட்டியொன்றை சுற்றி சித்திரவதை செய்த சந்தேக நபரொருவரை கொச்சிக்கடை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தாய்க்கு சொந்தமான வீடு மற்றும் காணியை தனது பெயரில் எழுதித் தருமாறு கேட்டு, 79 வயதான தாயை துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் திருமணமாகி தனது மனைவியுடன் கொச்சிக்கடை பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.
தனது மனைவியுடன் இணைந்து, சொத்துகளை கேட்டு தாயை துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மகனின் தாக்குதலுக்கு உள்ளான தாய், 2 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்ப பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தாய்க்கு சொந்தமான வீடு மற்றும் காணியை தனது பெயரில் எழுதித் தருமாறு கேட்டு, 79 வயதான தாயை துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் திருமணமாகி தனது மனைவியுடன் கொச்சிக்கடை பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.
தனது மனைவியுடன் இணைந்து, சொத்துகளை கேட்டு தாயை துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
மகனின் தாக்குதலுக்கு உள்ளான தாய், 2 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்ப பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories