மின்சார சபை ஊழியர்களை தாக்கிய 'தெலிசுதா' கைது

Thursday, 20 July 2017 - 16:16

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%27%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%27+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
அங்கொடை - அம்பத்தலே சந்தியில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை தாக்கிய சந்தேகநபர், காவற்துறையால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான காவற்துறை மற்றும் முல்லேரியாவ காவற்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதலின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெலிசுதா என்று அழைக்கப்படும் ப்ரியந்த ஸ்ரீனந்த என்று நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணம் செலுத்த தவறிய காரணத்தால், அங்கொடை - அம்பதலே பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் நேற்றுத் தாக்கப்பட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து, இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேச மின்சார பொறியியலாளர்களால் வேலை நிறுத்த போராட்டமொன்றை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips