ஐக்கிய நாடுகளின் இணைப்பொதுச் செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மென், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது இலங்கையின் நடப்பு அரசியல் சூழ்நிலைகள், அரசியல் யாப்பு தயாரிப்பு பணிகள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories