சூரியவெவ - விஹாரகல பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் நீர் தேங்கிய குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
இன்று காலை 8.00 மணியளவில் தனது தந்தையுடன் வயலுக்கு சென்ற கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சூரியவெவ காவற்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அதே பிரதேசத்தை சேர்ந்த கசுன் தனஞ்சய என்ற 4 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவன், தனது தந்தையுடன் வயலுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு எறும்பு கடிப்பதாக கூறியுள்ளான்.
பின்னர் அவரை வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டு தந்தை புற்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 10.00 மணியளவில் தந்தை வீடு திரும்பிய நிலையில், மகன் வீட்டில் இல்லாததால் குழப்பமடைந்துள்ளார்.
பின்னர் அயலவர்களுடன் இணைந்து தனது மகனை தேடும் பொழுது, நீர் தேங்கியிருந்த குழியொன்றில் விழுந்து கிடப்பதை பார்த்துள்ளார்.
பின்னர் சிறுவன் சூரியவெவ மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் தொடர்பான அவசர மரண பரிசோதனை, சூரியவெவ அவசர மரண பரிசோதகரால் இன்று இடம்பெற்றுள்ளது.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ காவற்துறை முன்னெடுத்துள்ளது.
இன்று காலை 8.00 மணியளவில் தனது தந்தையுடன் வயலுக்கு சென்ற கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சூரியவெவ காவற்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அதே பிரதேசத்தை சேர்ந்த கசுன் தனஞ்சய என்ற 4 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவன், தனது தந்தையுடன் வயலுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு எறும்பு கடிப்பதாக கூறியுள்ளான்.
பின்னர் அவரை வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டு தந்தை புற்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 10.00 மணியளவில் தந்தை வீடு திரும்பிய நிலையில், மகன் வீட்டில் இல்லாததால் குழப்பமடைந்துள்ளார்.
பின்னர் அயலவர்களுடன் இணைந்து தனது மகனை தேடும் பொழுது, நீர் தேங்கியிருந்த குழியொன்றில் விழுந்து கிடப்பதை பார்த்துள்ளார்.
பின்னர் சிறுவன் சூரியவெவ மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் தொடர்பான அவசர மரண பரிசோதனை, சூரியவெவ அவசர மரண பரிசோதகரால் இன்று இடம்பெற்றுள்ளது.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ காவற்துறை முன்னெடுத்துள்ளது.
Follow US
Most Viewed Stories