நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலநிலையில் சிறிதளவான மாற்றத்தை நாளை தொடக்கம் எதிர்ப்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி , மேல் , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும்.
விசேடமாக திருகோணமலை , வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் , ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை , சுமார் 5 மாதங்கள் நிலவிய வறட்சியான காலநிலையை தொடர்ந்து பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை , தியதலாவ மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்துள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தில் பெய்த பலத்த மழை காரணமாக மரமொன்று உடைந்து வீழ்ந்ததில் சிற்றுர்ந்து ஒன்றிற்கு சேதமேற்பட்டுள்ளது.
சுமார் , ஒன்றரை மணி நேரம் இந்த மழை பெய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை , பண்டாரவளை பிரதேசத்தில் பெய்த பலத்த மழையின் பின்னர் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக தொடர்ந்தும் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி , மேல் , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும்.
விசேடமாக திருகோணமலை , வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் , ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை , சுமார் 5 மாதங்கள் நிலவிய வறட்சியான காலநிலையை தொடர்ந்து பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை , தியதலாவ மற்றும் பண்டாரவளை பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்துள்ளது.
பண்டாரவளை பிரதேசத்தில் பெய்த பலத்த மழை காரணமாக மரமொன்று உடைந்து வீழ்ந்ததில் சிற்றுர்ந்து ஒன்றிற்கு சேதமேற்பட்டுள்ளது.
சுமார் , ஒன்றரை மணி நேரம் இந்த மழை பெய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை , பண்டாரவளை பிரதேசத்தில் பெய்த பலத்த மழையின் பின்னர் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக தொடர்ந்தும் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories