இங்கிலாந்து, லண்டனில் நடைபெறும் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பாக இரு போட்டியாளர்கள் பங்கு கொள்கின்றனர்.
ஹிருணி விஜயவர்தன மற்றும் இந்திரஜித் குரே ஆகியோர் மரதன் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்
இவர்கள் பங்கு கொள்ளும் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கான மரதன் போட்டியில் 54 நாடுகளைச் சேர்ந்த 108 போட்டியாளர்கள் பங்கு கொள்ளும் நிலையில், மகளீருக்கான மரதன் ஓட்டப்போட்டியில் 46 நாடுகளைச் சேர்ந்த 96 பேர் பங்கு கொள்கின்றனர்.
இந்த நிலையில், 39 வயதான இந்திரஜித் குரே ஏழாவது முறையாக சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories