பேருந்து மற்றும் உந்துருளி என்பன நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், உந்துருளியில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொடை காவல்துறை அதிகாரிகள் இதனை கூறினர்.
கொஸ்கொடை - மிரிஸ்வத்த - வதுரவெல பிரதேசத்தினை சேர்ந்த 19 வயதுடைய சமன் குமார எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 7.30 மணிக்கு ஏற்பட்ட விபத்தில், தலை பகுதியில் பலத்த காயம் எற்பட்டு பலபிடிய மருத்துவமனையில் இளைஞன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த இளைஞர் பலப்பிடிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், இன்று காலை 10.15க்கு உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்து இடம்பெறுவதற்கு முன்னர், உயிரிழந்தவரின் சகோதரி மற்றும் அவரது மகள் ஆகியோர் உந்துருளியில் பயணித்துள்ளனர்.
இளைஞனுக்கு வேலைக்கு செல்ல தாமதம் ஏற்பட்டமையால் அவர்களை இறக்கி விட்டு இளைஞன் மாத்திரம் பயணித்துள்ளார்.
இதன்போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொஸ்கொடை காவல்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Follow US
Most Viewed Stories