மோசடிக்காரர்களை பாதுகாக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, திருடர்களை உருவாக்கும் அரசாங்கம் ஒன்று அல்லாமல், திருடர்கள் அல்லாத அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் மோசடியில் ஈடுபட்டவர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு கையூட்டல் கொடுத்து தம்மை காப்பாற்றிக் கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, தற்போதைய அரசாங்கம் மோசடி செய்பவர்களை தண்டிக்க அரசாங்கத்தால் முடியாது உள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories