தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நீண்ட காலத்தை செலவிட தவறியதில் கவலையடைவதாக நோவேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான நீண்ட கால சந்தர்ப்பொன்று கிடைத்திருக்கும் பட்சத்தில் அவருடன் தொடர்ச்சியான கலந்துரையாடலில் ஈடுபட்டு, அவரது எண்ணங்களில் மாற்றத்தை கொண்டு வந்திருக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கு தமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Follow US
Most Viewed Stories