ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சந்தேகத்துக்குரியவர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பார்சிலோனாவின் பிரதான சுற்றுலாத்தளமான லாஸ் ரம்ப்லாஸில், சிற்றூர்ந்தைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
13 பேர் பலியான இந்த தாக்குதலை நடத்திய பிரதான சந்தேகத்துக்குரியவர் யூனிஸ் அபோயாகோப் என்று அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அவர் பார்சிலோனாவில் தலைமறைவாகி இருந்த நிலையில், தொடர்ந்து தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் நேற்று அவர் மேற்கு பார்சிலோனாவில் வைத்து காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்படும் போது அவர் போலியான தற்கொலை அங்கி ஒன்றை அணிந்திருந்ததாகவும், அல்லாஹு அக்பர் என்று கோசமிட்டதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைக்கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories