4 வயது சிறுமியை சீரழித்த ஆசிரியர் கைது

Tuesday, 22 August 2017 - 10:44

4+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
புதுச்சேரி காரைக்காலில் 4 வயது பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் அடுத்த சேத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீவிக்னேஸ்வரா உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியரான பக்கிரிசாமி அப்பள்ளியில் பயிலும் 4 வயது சிறுமியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு வன்புணர்வு செய்ததாக கூறபடுகிறது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சோதனையின் மூலம் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை உறுதிபடுத்தபட்டது.

பள்ளி தாளாளரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பக்கிரி சாமியை கைது செய்தனர்.

பக்கிரிசாமி பணிஇடை நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கபட்டது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips