வன்புணர்வுக்கு உட்படுத்திய சாரதியிடம் இருந்து 'பொய் கூறி' தப்பித்த இளம்பெண்!

Tuesday, 22 August 2017 - 16:13

%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%27%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%27+%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%21
தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்திய வாடகை சிற்றூர்ந்து சாரதியிடம் பொய்கூறி தப்பித்த யுவதியின் சாமர்த்தியம் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தான் பொய் கூறி தப்பித்த விதத்தை யுவதி, நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

லண்டன் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், மதுபோதையில் வாடகை சிற்றூர்ந்தில் பயணித்துள்ளார்.

அதன்போது, அவரது வீடு இருக்கும் பகுதிக்கு செல்லாமல் தவறான பாதையில் வாடகை சிற்றூர்ந்தை சாரதி செலுத்திச் சென்றுள்ளார்.

அதன்போது, சிற்றூர்ந்து சாரதி அந்த யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

மதுபோதையில் இருந்தாலும் தான் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதை உணர்ந்துகொண்ட யுவதி, தப்பித்துச் செல்வதற்காக பொய்யொன்றை கூறியுள்ளார்.

குறித்த சாரதியுடன் போராடினால் தான் கொலை செய்யப்படக்கூடும் என்று அஞ்சிய யுவதி, 'நீ என்ன செய்கிறாய்' என்று கேட்டுள்ளார்.

அந்த நபர் தனது இருக்கையில் இருந்து இறங்கி பின்புறமாக வந்துள்ளார்.
அதன்போது, அவரது அந்தரங்க உறுப்பு வெளியில் வந்த நிலையில் இருந்துள்ளது.

என்னை விட்டு தள்ளி சென்றுவிடு என யுவதி கத்தியுள்ளார்.

'அவரிடம் இருந்து தப்புவதற்காக பொய் ஒன்றை கூறினேன். அந்த யோசனை எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை' என, நீதிமன்றில் யுவதி கூறினார்.

' எனக்கு எயிட்ஸ் உள்ளது. அதனால் என்றுடன் நீ உறவு கொள்ள தேவையில்லை' என்று அவர் கூறியுள்ளார்.

அதனை கேட்டு பீதியடைந்த சாரதி, சிற்றூர்ந்தில் இருந்த தண்ணீர் போத்தலை திறந்து தனது வாய் மற்றும் அந்தரங்க உறுப்பை அவசரமாக கழுவியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 42 வயது சாரதி, தான் யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்பட்டதை மறுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக, வெளிநாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips