ஹொரணை - பொகுணுவிட பிரசேதத்தில் 22 வயது இளம் தாயொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
அவர் இன்று காலை தனது இரண்டரை வயதுடைய தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார்.
பின்னர் , கவலைக்கிடமான நிலையில் , இருவரையும் ஹொரணை ஆதார மருத்துவமனையில் பிரதேசவாசிகள் அனுமதித்துள்ளனர்.
இந்த பெண் , தனியார் நிதி நிறுவனமொன்றில் பெற்றுக்கொண்ட கடன் தொகையை மீள செலுத்த முடியாத காரணத்தால் இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் 35 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ள நிலையில் , பின்னர் வாரமொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் , கடந்த மூன்று வாரங்களில் பணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளது.
அவர் இன்னும் ஏழாயிரம் ரூபாய் செலுத்தவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் , குறித்த பணத்தொகையை செலுத்த முடியாத காரணத்தால் இவ்வாறு தற்கொலை செய்துக்கொள்ள தீர்மானித்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெறும் போது , அவரின ்கணவர் கூலி வேலைக்காக வௌியில் சென்றிருந்ததாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் , குறித்த பெண் கவலைக்கிடமான நிலையை தாண்டியுள்ள நிலையில் , குழந்தை தொடர்ந்தும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று காலை தனது இரண்டரை வயதுடைய தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார்.
பின்னர் , கவலைக்கிடமான நிலையில் , இருவரையும் ஹொரணை ஆதார மருத்துவமனையில் பிரதேசவாசிகள் அனுமதித்துள்ளனர்.
இந்த பெண் , தனியார் நிதி நிறுவனமொன்றில் பெற்றுக்கொண்ட கடன் தொகையை மீள செலுத்த முடியாத காரணத்தால் இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் 35 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ள நிலையில் , பின்னர் வாரமொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் , கடந்த மூன்று வாரங்களில் பணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளது.
அவர் இன்னும் ஏழாயிரம் ரூபாய் செலுத்தவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் , குறித்த பணத்தொகையை செலுத்த முடியாத காரணத்தால் இவ்வாறு தற்கொலை செய்துக்கொள்ள தீர்மானித்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெறும் போது , அவரின ்கணவர் கூலி வேலைக்காக வௌியில் சென்றிருந்ததாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் , குறித்த பெண் கவலைக்கிடமான நிலையை தாண்டியுள்ள நிலையில் , குழந்தை தொடர்ந்தும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories