22 வயது இளம் தாயின் அதிர்ச்சி செயல்...இரண்டரை வயது குழந்தை கவலைக்கிடம் (காணொளி)

Monday, 25 September 2017 - 18:16

22+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D...%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
ஹொரணை - பொகுணுவிட பிரசேதத்தில் 22 வயது இளம் தாயொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

அவர் இன்று காலை தனது இரண்டரை வயதுடைய தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார்.

பின்னர் , கவலைக்கிடமான நிலையில் , இருவரையும் ஹொரணை ஆதார மருத்துவமனையில் பிரதேசவாசிகள் அனுமதித்துள்ளனர்.

இந்த பெண் , தனியார் நிதி நிறுவனமொன்றில் பெற்றுக்கொண்ட கடன் தொகையை மீள செலுத்த முடியாத காரணத்தால் இவ்வாறு விஷம் அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் 35 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ள நிலையில் , பின்னர் வாரமொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் , கடந்த மூன்று வாரங்களில் பணத்தை செலுத்த முடியாமல் போயுள்ளது.

அவர் இன்னும் ஏழாயிரம் ரூபாய் செலுத்தவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் , குறித்த பணத்தொகையை செலுத்த முடியாத காரணத்தால் இவ்வாறு தற்கொலை செய்துக்கொள்ள தீர்மானித்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெறும் போது , அவரின ்கணவர் கூலி வேலைக்காக வௌியில் சென்றிருந்ததாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த பெண் கவலைக்கிடமான நிலையை தாண்டியுள்ள  நிலையில் , குழந்தை தொடர்ந்தும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips