கொலன்னாவ – சாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த திருமணமான இளம் யுவதியொருவர் மற்றும் மேலும் இரண்டு பாடசாலை மாணவிகளும் காணாமல் போயுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
19 வயதான முலிதி வத்சலா பெரோ, 15 வயதான யசந்தி மதுஷானி பெரேரா மற்றும் 14 வயதான சவித்ரி ஆகியோரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதான யுவதிக்கு ஒன்றரை வயது குழந்தையொன்றும் இருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (14) பிற்பகல் 2.30 மணியளவில் அயல் அயல் வீட்டில் வசிக்கும் இவர்கள் மூவரும் அங்கிருந்து சென்றுள்ள நிலையில், அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இன்று(16) காலை யசந்தி மதுஷானி பெரேரா என்ற மாணவி, தனது சகோதரனிடம் தொலைபேசி ஊடாக அழைத்து, மீண்டும் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் அவர்களை யாராவது தடுத்து வைத்திருக்கலாம் என பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.
தொலைபேசி அழைப்பின் போது அந்த மாணவி அருகே பல ஆண்கள் இருந்துள்ளமை போல் சத்தம் கேட்டுள்ளதாக சகோதரன் கூறியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெற்றோரால் வெல்லம்பிட்டிய காவல்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
19 வயதான முலிதி வத்சலா பெரோ, 15 வயதான யசந்தி மதுஷானி பெரேரா மற்றும் 14 வயதான சவித்ரி ஆகியோரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதான யுவதிக்கு ஒன்றரை வயது குழந்தையொன்றும் இருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (14) பிற்பகல் 2.30 மணியளவில் அயல் அயல் வீட்டில் வசிக்கும் இவர்கள் மூவரும் அங்கிருந்து சென்றுள்ள நிலையில், அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இன்று(16) காலை யசந்தி மதுஷானி பெரேரா என்ற மாணவி, தனது சகோதரனிடம் தொலைபேசி ஊடாக அழைத்து, மீண்டும் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் அவர்களை யாராவது தடுத்து வைத்திருக்கலாம் என பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.
தொலைபேசி அழைப்பின் போது அந்த மாணவி அருகே பல ஆண்கள் இருந்துள்ளமை போல் சத்தம் கேட்டுள்ளதாக சகோதரன் கூறியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெற்றோரால் வெல்லம்பிட்டிய காவல்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories