ஒக்டோபர் 23ம் திகதியின் பின்னர் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்!!

Friday, 20 October 2017 - 17:16

%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+23%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%21%21
ஒக்டோபர் 23ம் திகதி தொடக்கம் நாட்டின் அநேகமான பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த நிலையம் இதனை குறிப்பிட்டுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய , வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75க்கும் 100 மில்லிமீற்றருக்கும் இடையில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை , கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிக மழைவீழச்சியாக 104.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பாதுக்கை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக மாத்தறை வரை கடற்கரைக்கு அப்பால் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips