சோமாலியா தலைநகர் மொகதேஷில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த குண்டு வெடிப்புக்களில் ஏற்பட்ட இடிப்பாடுகளுக்குள் சிக்கி 56 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களை மீட்பதற்கான மீட்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories