தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்மக்களை ஏமாற்றி வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முயற்சியை தாண்டி போராட்டங்களின் மூலமே, மக்கள் இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது காணிகளை மீட்டு வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதுமாத்திரமன்றி, அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இது தொடர்பில் எமது செய்திச் சேவை தமிழ் தேசிய கூட்டமைப்பிரை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
Follow US
Most Viewed Stories