இந்த பதாகை எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக காரில் சென்ற தேவநாதன் (38) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் அவருடன் காரிலிருந்த அவரது குடும்பத்தினருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் செங்கல்பட்டு துணை ஆட்சியர் ஜெயசீலனிடன் முறைப்பாட்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயசீலன் கூறும்போது, ''அப்பகுதியில் பதாகை வைக்க நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. இது அங்கீகரிக்கப்படாதது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இந்த விபத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறும்போது, ''பதாகை சரியாக பொருத்தப்படாமல் இருந்தது. பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு விளைவிக்கும், இது போன்ற பதாகைகளுக்கு போக்குவரத்து காவல்துறை அனுமதி அளிக்கக் கூடாது'' என்றார்.