பிரிட்டனின் பக்கிங்காம்ஷேர் பகுதியில், வானூர்தி ஒன்றும் உலங்கு வானூர்தி ஒன்றும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியானர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், விமானம் மற்றும் உலங்கு வானூர்தியில் பயணித்தவர்களில் தலா இரண்டு பேர் பலியானதாக தேம்ஸ் வெலி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் வனப்பகுதி ஒன்றின் மேற்பரப்பில், இடம்பெறுள்ளது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் விமானம் மற்றும் உலங்கு வானூர்த்தியின் சிதைவுகளையும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கiயும் மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்று தேம்ஸ் வெலி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பில். காவல்துறையினரும், விமான விபத்துகள் விசாரணை பிரிவினரும் கூட்டு விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Follow US
Most Viewed Stories