மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கம் மற்றும் அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் என்பன மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளனர்.
அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் ஊடக பேச்சாளர் மருத்துவர் நிமல் கருணாசிறி இதனை தெரிவித்தார்.
இதற்கமைய இன்று மாலையளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது சைட்டம் பிரச்சினைக்கான எதிர்கால தீர்மானம் குறித்து, கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Follow US
Most Viewed Stories