சம்மாந்துறை அதிபர் மூன்று மாணவிகளுக்கு செய்த கொடூரம்!!

Tuesday, 21 November 2017 - 10:29

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21+
10 வயது மாணவிகள் மூன்று பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை - சம்மாந்துறை கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலையொன்றின் அதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் கடந்த மாதங்களின் மூன்று சந்தர்ப்பத்தில் இவ்வாறு குறித்த மாணவிகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் , இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த அதிபர் நேற்று கைது செய்யப்பட்டதாக சம்மாந்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் - மணல்காடு பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று இந்த தீர்ப்பை வழங்கினார்.
 
2012ம் ஆண்டு ஜுலை மாதம் 16 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக, 47 வயதான, நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
 
இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறையுடன், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
 
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 லட்சம் ரூபாய் நட்டயீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
 
நட்டயீட்டையும் அபராதத்தையும்செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டுகளுக்கு கடூழிய சிறை தண்டனை அதிகரிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips