கடந்த ஆகஸ்ட் மாத்தில் மியன்மாரில் ஏற்பட வன்முறை சம்பவத்தை அடுத்து குறைந்தபட்சம் 6 ஆயிரத்து 700 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எம்.எஸ்.எப் எனப்படும் பிரான்ஸைச் சேர்ந்த தொண்டு அமைப்பு ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் 400 பேரே கொல்லப்பட்டுள்ளதாக மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 9 ஆயிரம் ரோஹின்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வொன்று குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow US
Most Viewed Stories