ஹொரனை பிரதேச சபையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் தாக்கல் செய்யப்படவிருந்த வேட்பு மனு நேற்று இரவு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின், பொகுனுவிடயில் உள்ள வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சிற்றூர்தி ஒன்றில் பிரவேசித்த அடையாளம் தெரியாத மூவர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை அச்சுறுத்தியப் பின்னரே, குறித்த வேட்பு மனுவைக் களவாடிச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில், அது தொடர்பில் குறிப்பிட்ட சிலர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்
Follow US
Most Viewed Stories