கனெமுல்ல தொடரூந்து வீதிக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் இன்று (11) காலை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த பாலத்தின் முதலாவது கட்டம் கனெமுல்ல – கடவத்தை வீதியில் இருந்து கந்தானை வீதிவரை 275 மீட்டர் நீளமான இரண்டு ஒழுங்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் இரண்டாவது கட்டம் கனேமுல்ல – கம்பஹா வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த பாலத்திற்காக 1768 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் நிர்மாண நடவடிக்கைகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் ஸ்பெயின் நாட்டின் நிறுவனம் மற்றும் இந்நாட்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த பாலத்தின் முதலாவது கட்டம் கனெமுல்ல – கடவத்தை வீதியில் இருந்து கந்தானை வீதிவரை 275 மீட்டர் நீளமான இரண்டு ஒழுங்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் இரண்டாவது கட்டம் கனேமுல்ல – கம்பஹா வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த பாலத்திற்காக 1768 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் நிர்மாண நடவடிக்கைகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் ஸ்பெயின் நாட்டின் நிறுவனம் மற்றும் இந்நாட்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
Follow US
Most Viewed Stories