இந்திய இராணுவ தளபதியின் கருத்துக்கு கண்டனம்

Tuesday, 16 January 2018 - 13:59

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
இந்திய இராணுவ தளபதி பிபின் ராவத்தின் கருத்தொன்றுக்கு சீன வெளிவிவகார அமைச்சு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மேற்கு எல்லையிலும் மற்றும் வடக்கு எல்லையிலும் இந்திய இராணுவத்திற்கு அதிக கவனம் தேவைப்படுவதாக இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் மேற்குப் பிரதேசமான டோக்லாம் பகுதியில் சீனாவுடன் எச்சரிக்கையாக செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

இதற்கே சீனா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இராணுவ தளபதியின் கருத்து, இந்தியா மற்றும் சீன தலைவர்களுக்கிடையிலான நிலைப்பாடுகளுக்கு முரணாக இருப்பதாகவும், எல்லைப்பகுதிகளில் அமைதியை பேணுவதற்கான நிலைப்பாட்டுக்கு எதிரானதென்றும் சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்திய – சீன எல்லைப்பகுதியான டோக்லாம் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படுவதுண்டு.

அண்மையிலும் இத்தகைய அமைதியற்ற நிலை ஏற்பட்டு, இருநாட்டு எல்லைகளிலும் அதிகளவான இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips