இந்திய கடற்படையின் அதிரடி தீர்மானம்

Wednesday, 17 January 2018 - 20:15

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
இந்திய கடற்படை தங்களது பாதுகாப்பு தளபாடங்களை நவீனப்படுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளது.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இதனால் ஏற்படக்கூடிய சவால்களை சமாளிக்கும் வகையில், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்காக பி.8ஐ என்ற கண்காணிப்பு வானூர்தியை கடற்படை கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த உத்தேசித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைத் தளபதி சுனில் லம்பா, இந்தியன் ஸ்ட்ரெட்டிஜிக் என்ற இணையத்தளத்துக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியும் கிடைக்கப்பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips